Skip to content

செய்… செய்யாதே!

₹145

சத்குரு ஜக்கி வாசுதேவ் எழுதிய செய்... செய்யாதே! - வாழ்க்கைப் பாதையில் சரியான முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டி. தெளிவான பதில்களுடன் மன அமைதி பெறுங்கள்.

Category Essay
Publisher விகடன் பிரசுரம்
Language தமிழ்
Format Paperback
Tags Philosophy and Thought

Description

எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால், எல்லோரது கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா..?! ‘நிச்சயம் இருக்கிறது’ என்பதுதான் சத்குருவின் நம்பிக்கை தரும் பதில். சிலருக்கு வாழ்க்கை பெரும் குழப்பம்தான். எதைச் செய்வது... எதைச் செய்யாமல் இருப்பது... என்று தெரியாமல் பலர் தவிக்கிறார்கள். எதைச் செய்தால் வாழ்க்கையின் சிகரத்தை எட்ட முடியும்? எதைச் செய்யாமல் இருந்தால் வாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து தப்ப முடியும்? நாம் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியான பாதைதானா? நம்முடைய சிந்தனைகளும் சரியானதா? வாழ்க்கை நமக்கு வசப்பட வேண்டுமானால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. வாழ்க்கை, பெரும் விசித்திரங்களையும் மாய வித்தைகளையும் தன்னுள் நிரப்பி வைத்திருக்கிறது. அவற்றைப் புரிந்து கொண்டால்தான் தெளிவு கிடைக்கிறது. வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள எண்ணற்ற கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் தெளிவான பதில் தருகிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘செய்... செய்யாதே!’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த கேள்வி&பதில் பகுதி, இப்போது நூல் வடிவில்.