தோழர் தமிழ்ஒளி: காவியங்கள் (பகுதி 1)
தமிழ் ஒளி எழுதிய தோழர் தமிழ்ஒளி: காவியங்கள் (பகுதி 1) - உழைக்கும் மக்களின் வாழ்வை சித்தரிக்கும் காவியங்கள், மார்க்சியத் தத்துவத்தின் தாக்கம், தமிழ் இலக்கியச் செழுமை.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 352 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
| SKU | 9788198457897 |
Description
தோழர் தமிழ்ஒளி (1925-1965) நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். பாரதி தேசியக் கவி, பாரதிதாசன் சுயமரியாதை இயக்கக் கவி தமிழ்ஒளி இடதுசாரி இயக்கக் கவி. முப்பெரும் கவிகளாகத் தமிழ்க் கவிதை வரலாற்று மரபு அமைகிறது.
தமிழ் ஒளி ஆக்கங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமது எழுத்தியக்கத்தை முன்னெடுத்தவர். மார்க்சியத் தத்துவத்தைப் பயின்றவர். அதை நடைமுறைப்படுத்த உழைத்தவர்.
‘தோழர் தமிழ்ஒளி: காவியங்கள்’ என்னும் இத்தொகுதி முதல் பாகமாக அமைகிறது. தமிழ்ஒளி எழுதிய ஐந்து காவியங்கள் மட்டும் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று காவியங்கள் 1947-1948 காலங்களில் எழுதியவை. உழைக்கும் மக்களைப் பாத்திரங்களாக கொண்ட காவியங்கள் இவை.
