காலமாய் நின்ற கவி – பாரதி
கிருங்கை சேதுபதி எழுதிய காலமாய் நின்ற கவி - பாரதியைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், கவிதை மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த புத்தகம். பாரதி குறித்த புதிய புரிதலைப் பெறலாம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788199181922 |
Description
தமிழிலக்கிய உலகில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஆய்வாளர் பேராசிரியர் கிருங்கை சேதுபதி அவர்கள். இடைவிடாத பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டு ஓடியாடி உழைப்பவர். அவர் எழுதிய இருபத்தொரு கட்டுரைகள் ‘காலமாய் நின்ற கவி என்ற நூலாக வெளிவருகின்றன. பாரதியைப் பற்றிய ஆய்வுகள் எனப்படும் மகுடத்தில் இது இன்னுமொரு மாணிக்கம் என்று கூற விழைகிறேன்.
பாரதி ஒரு கருத்துச் சுரங்கம்; அதில் ஈடுபட்டுத் தோண்டத் தோண்டத் தங்கம் கிடைத்துக் கொண்டே இருக்கும். காலத்திற்குள் அடங்காதது எதுவுமில்லை. ஆனால், பாரதி காலத்தைக் கடந்து பேருருவம் கொண்டு நிற்கிறான். அப்பேருருவத்திற்குள் காலம் அடங்கி நிற்கிறது. எனவே பாரதி, காலமாகவே மாறி இன்றளவும் இயக்குகிறான்: இயங்குகிறான். அதனைச் சரியாக இனங்கண்டு சேதுபதி அவர்கள் இந்நூலைப் படைத்தளிக்கிறார்.
பல அரிய தகவல்கள் நிறைந்த பெட்டகமாக இந்நூலை யாத்திருக்கிறார் கிருங்கை சேதுபதி. ஓர் அரிய கவிஞரைப் பற்றி நல்ல நூலினைத் தந்தமைக்காகத் தமிழ்கூறு நல்லுலகம் கிருங்கை சேதுபதி அவர்களைப் போற்றக்கூடும். நானும் வாழ்த்துகிறேன்.
-முனைவர் ம.திருமலை
