Skip to content

உணவு டெலிவரிக் கதைகள்

(நாகரீக வாழ்வில் நவீனச் சுரண்டல்)

அ. இருதயராஜ் எழுதிய உணவு டெலிவரிக் கதைகள் - உணவு டெலிவரி தொழிலாளர்களின் வாழ்க்கை, கிக் பொருளாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் சவால்களைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 200
Year 2025
Format Paperback
Tags Society and Economy
SKU 9788199672420

Description

இந்த “கிக் பொருளாதாரம்” அல்லது “கிக் தொழில்” பற்றியான முதல் புத்தகம் இது தான் என்று நான் கருதுகிறேன். அதற்காக ஆசிரியருக்கு என்னுடைய மனம் திறந்த பாராட்டுக்கள். இந்தத் துறை. அதாவது “கிக் தொழிலில்” ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. உலகமயம் மற்றும் தாராளமயம் ஆகிய இரு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு. இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் கார்பரேட் முதலாளிகளுக்கு பெரிதும் உதவுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக உருவெடுத்த அல்கொரிதம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலளர்களின் வாழ்க்கையைப் புரட்டியெடுக்கிறது. அது எப்போதுமே முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் அதை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும், அதைப் பயன்படுத்தும் மக்களுக்கும் எந்தவித சலுகைகளைச் செய்வதில்லை என்பதை அ.இருதயராஜ் சுட்டிக் காட்டியுள்ளார்.

-கே. சி. கோபிகுமார்
சி.ஐ.டி.யு செயலாளர்
சென்னை

நாம் ஆர்டர் செய்து சுவைக்கும் உணவை டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் யாரும் ஒருபோதும் மலர்ந்த முகத்துடன் இருப்பதில்லை. அதை நாம் கவனித்திருந்தாலும், கவனிக்காவிட்டாலும் உணவு பொட்டலத்தை வாங்கிய பிறகு, அதற்கான காரணங்களைப் பற்றி நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. இந்தப் புத்தகம் நாம் பார்க்க மறந்த நகரத்தின் நவீன கூலித் தொழிலாளர்களை நமக்கு சரியான வகையில் அடையாளம் காட்டுகிறது. “கிக் பொருளாதாரம்” என்ற மாற்றுப் பொருளாதாரத்தை நமக்கு முன் கட்டமைத்து, அது “முழு நேர வேலையை விட சுதந்திரமானது”, “விரைவாக வருமானம் ஈட்டக்கூடியது”, “வேலை செய்வதில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளது” என்ற போலியான பிம்பத்தைத் தொழிலாளர்கள் மத்தியில் கட்டமைத்துள்ளது. அந்த பிம்பத்தை இந்த நூலாசிரியர் அ.இருதயராஜ் கட்டுடைக்கிறார். அந்த போலியான பிம்பத்தின் பல முகங்களைத் தோலுரித்துக் காட்டுகிறார். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

-முனைவர். அழகிரிசாமி,
சென்னை