Skip to content

நோயாளிகளும் மருத்துவர்களும்: தமிழரின் சித்த மருத்துவ முறையை ஐரோப்பியர் கண்டதும் தெரிந்துக்கொண்டதும் (1550 – 1873)

எஸ். ஜெயசீல ஸ்டீபன் எழுதிய நோயாளிகளும் மருத்துவர்களும் - 1550-1873 காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் கண்டறிந்த சித்த மருத்துவம், தமிழர் மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் பற்றி அறியலாம்.

Category History
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 254
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788197244100

Description

இந்த நூலில் தமிழ்நாட்டு மக்களிடம் ஐரோப்பியர்கள் கண்ட நோய்களும், மருத்துவ முறையும், மருத்துவமனைகளும் (1550-1857) நன்கு விளக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கடி. வண்டுக்கடி. தேள்கடி, நாய்க்கடி மற்றும் நச்சு பற்றிய ஐரோப்பியர்கள் ஆய்வும் நோய்களைக் குணமாக்கும் தமிழர் மருந்துகளும் (1700-1848) பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பாம்புக்கடிக்குத் தமிழர் மருந்துகளும், மருத்துவ முறைகளும் ஐரோப்பியர்கள் நடத்திய ஆய்வுகளும் (1701-1853) எவ்வாறு நிகழ்ந்தன என்று தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுமத்தின் பெரியம்மை நோய்த் தடுப்பூசித் திட்டம் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் (1800-1828) பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றன. ’அகத்தியர் இரண்டாயிரம்’ என்ற தமிழ் மருத்துவச் சுவடியை பாதிரியார் குருண்லர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது (1710-1712), தஞ்சாவூர் மன்னர் அரண்மனை தன்வந்திரி மகால் மருத்துவமனையில் நோய்களுக்காக நடத்திய மருத்துவப் புதுமை ஆய்வுகள், மருத்துவ முறை மற்றும் மருந்துகள் (1827-1830) பற்றியும் விரிவாக அலசப்பட்டுள்ளன. இராமலிங்க அடிகள் (வள்ளலார்) கண்ட மூலிகை மருந்துகளும், நோய்களும் (1868-1873), தமிழர் மருத்துவச் செய்திப் பரிமாற்றம் மூலம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சி (1688-1855) பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.

முன் அட்டைப்படத்தில் இருப்பது: தமிழக சித்த மருத்துவர்கள். பெர்லின் அருங்காட்சியகம், எண். 15039 (1)