ஆனந்தி (நாவல்)
கன்யூட்ராஜ் எழுதிய ஆனந்தி (நாவல்) - வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொள்ளும் ஆனந்தியின் கதை! சுய தேடல் மற்றும் மன அமைதி குறித்த நாவல் இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 342 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
| SKU | 9788198377227 |
Description
வாழ்க்கையின் தனி மனித சிக்கல்களில் உழன்ற ஒரு பெண், இதிலிருந்து விடுபட முயலுகிறாள். தன் முயற்சியை அவள் தொடங்கியபோதுதான், நாம் தீவிரமாக விரும்புவதை பிரபஞ்ச சக்தி நமக்குத் தரத் தயாராயிருக்கிறது எனும் புரிதல் அவளுக்கு வெளிப்படுகிறது. சக மனிதர்கள் வாயிலாக அந்தப் பெண்ணுக்கு தன் தேடலின் உள் அடக்கம் வெளிப்படுத்தப்பட்டது. அந்தப் பெண்ணின் தனி மனித நில்லா தேடல் அனுபவங்கள்தான் இந்த நாவல், அந்த பெண்ணின் பெயர் ஆனந்தி. இந்த நாவலுக்கும் அதுதான் பெயர்.
இந்தக் கதை அம்பாசமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் ஆழ்வார்குறிச்சியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவசைலம் என்ற மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் செழிப்பு மிகு ஊரில் நடைபெறுகிறது. இந்த ஊரும் நிஜம். இந்தத் தேடலும் நிஜம்.
