தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விளங்கினங்களுடனான தொடர்பு
அய்ரோப்பியர்களின் விலங்கு அறிவியல் ஆராய்ச்சியும், மருத்துவ- விலங்கியல் வளர்ச்சியும்(1639-1857)
எஸ். ஜெயசீல ஸ்டீபன் எழுதிய தமிழகத்தில் மனிதர்கள் மற்றும் விளங்கினங்களுடனான தொடர்பு - தமிழ் உலகின் விலங்கியல், ஐரோப்பியர்களின் ஆய்வுகள், மற்றும் வரலாற்று ஆவணங்களை நுணுக்கமாக ஆராய்கிறது.
| Category | History |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 280 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788123444772 |
Description
தமிழகக் கடற்கரையில் வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர் இங்கு வாழ்ந்த உயிரினங்கள் புதியனவாகவும் ஐரோப்பாவில் இருந்த விலங்கினங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டு இருப்பதையும் கண்டு வியந்தனர். இதனால் அவற்றைப் பற்றி கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் மூலம் மேல்நாட்டாருக்கு விளக்கினர். இதுவுமன்றி பெருமளவிலான வண்ணப்படங்கள் வரைந்து அனுப்பினர். இந்த நூலில் ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் தமிழ் உலகின் விலங்கினங்கள், வருகைக்குப் பின் பறவைத் தொகுதியும் பறவையியலும் (1701-1807), பூச்சியியல் மற்றும் ஊர்வனவியல், வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ஆய்வு (1690-1853) ஆகியன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வியப்பிற்குரிய விலங்குகளும் விலங்கியலும் (1639-1857). பாம்புவியல் மற்றும் நச்சுயியலைப் பட்டறிவு மூலம் ஐரோப்பியர்கள் கற்றல் (1701-1853). மீனியல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைக் கூர்ந்துநோக்கல் மற்றும் அடையாளம் காணல் (1779-1853) விரிவாக அலசப்பட்டுள்ளன. ஆவணக் காப்பகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் - குறிப்பாக இலண்டன். பெர்லின், பாரீஸ். ஹாலே. கோபன்ஹேகன், செண்பகனூர். சென்னையிலுள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகம், தஞ்சை சரஸ்வதி மகால் போன்ற இடங்களிலிருந்து சேகரித்து ஆராய்ந்து இந்த நூல் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது..
