Skip to content

நம் தாயகம் பால்வழி மண்டலம்

₹0.00

பால்வழி மண்டலம் பற்றிய ஒரு அற்புதமான அறிவியல் விளக்கம்! சோ.மோகனா எழுதிய 'நம் தாயகம் பால்வழி மண்டலம்' புத்தகம் அண்டவெளியின் ரகசியங்களை அறிய உதவும்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language Tamil
Format Paperback
Tags Astronomy , Physics , Space Science

Description

நம் தாயகம் பால்வழி மண்டலம்நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி அண்ணாந்து பாருங்கள்.. தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் இலேசான மெல்லிய பால் மேகம் போல் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும்.அதுதான் நம் சூரியக் குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இதில் வைரத்தைக் கொட்டியது போல ஏராளமான விண்மீன்கள் தெரியும். இங்கே 20 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன.இவைகள் எல்லாம் ஏதோ அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் தோன்றுகிறது. அது உண்மையல்ல. அவைகளுக்கிடையே பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளி உண்டு. ஆனால் உண்மையில் விண்மீன்களுக்கிடையே சூனிய வளியே காணப்படுகிறது.இரவில் நாம் பால்வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டுதான் அதன் உட்புறத்தை பார்வையிடுவோம்.எப்படி தெரியுமா, வீட்டின் வெளியே நின்று கொண்டு வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்து தெரிந்து கொள்வது போன்றுதான்.நிற்பதுவே நகர்வதுவே பறப்பதுவேஉங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? நம் சூரியக் குடும்பம் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது. நம் மைய நாயகனான பால்வழி மண்டலத்தை இதுவரை 20 சுற்றுகள் சுற்றியுள்ளது. பால்வழி மண்டலமாவது சும்மா இருக்கிறதா. அதுவும் ஓயாமல் நகர்ந்து கொண்டே சுற்றுகிறது.எப்படித் தெரியுமா? பிரமாண்டமான இராட்சத குடைராட்டினம் போல சுற்றி சுற்றி வருகிறது. அதன் வேகம் எவ்வளவு தெரியுமா? பூமி வினாடிக்கு 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் வினாடிக்கு 250 கி.மீ. வேகத்திலும் பால்வழி மண்டலம் சூரியக் குடும்பத்துடன் சேர்ந்து வினாடிக்கு சுமார் 390 கி.மீ. வேகத்திலும் அண்டவெளியில் நகர்ந்து கொண்டே செல்கிறது.அப்போது பால்வழி மண்டலங்களுக்கிடையே உள்ள உள்ளூர் தொகுதிகள் (ழிoணீal மிroups) சுமார் நொடிக்கு 60 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. நாம் நகரும் வேகத்தை கணக்கிட்டால் ஆடாமல், அசங்காமல், அலுங்காமல், குலுங்காமல் வினாடிக்கு 30+250+140(+250)+60 சுமார் 480 கி.மீ. வேகத்தில் பிரபஞ்சவெளியில் நாம் பயணிக்கிறோம் ஆச்சரியமாக இருக்கிறதா.... இதுதான் உண்மை.சொகுசான பயணம்இந்த குடை இராட்டின பால்வழி மண்டலத்திற்குள் விண்மீன் தொகுதிகள், விண்மீன் குடும்பங்கள், நம் சூரியக்குடும்பம், அவற்றின் துணைக்கோள்கள் என எதுவுமே கீழே விழாமல் எப்படி..... எப்படி... இலாவகமாக சுழன்று... சுழன்று.... பம்பரமாய் நடனமாடுகின்றன. இந்த அண்டங்கள், யார் இவற்றை ஆட்டி வைப்பது.வேறு யார், மைய அழுத்தமும், ஈர்ப்பு, விசையும் தான் இடை விடாத வேகமான பேரியக்கம் இது. நெடுஞ்சாலையில் ஒரு கார் 100 கி. மீ. வேகத்தை தாண்டினாலே என்னப்பா வேகம் என பிரமிக்கிறோம். ஆனால் நாம் அண்டராட்டினத்தில் ஒரு மோதல். ஒரு குலுக்கல். ஆட்டம் இன்றி பூமியில் உள்ள அனைவருமே ஒரு மணி நேரத்தில் சுமார் 8,04,500 கி. மீ. தூரத்தை கடக்கிறோம்.