Skip to content

வெயில் பறந்தது

₹100.00

மதார் எழுதிய 'வெயில் பறந்தது' கவிதைகள், சாதாரண விஷயங்களில் அசாதாரணத்தை சுட்டிக்காட்டுகின்றன. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher அழிசி பதிப்பகம்
Language Tamil
Year 2022
Format Paperback

Description

மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். ஊரையே திறக்கும், மூடும் பூக்காரியின் லாவகம் கொண்டிருக்கும் இக்கவிதைகள் விஷேசமான தனிமையை அகத்தே கொண்டவை."தனிமையைப் பகிர ஆளிலா கிழத்திகடிதம் எழுதுகிறாள்இறந்துபோன கிழவனுக்குஎழுதி எழுதிச் சுருட்டப்பட்டகாகிதங்களில்காது குடைகிறாள்திட்டுத்திட்டாய் வருகிறதுபழுப்பு அழுக்குகிழவரைப் புதைத்த மணல்"என்பது போல மாயம் நிகழ்த்தும் கவிதைகள்.- லக்ஷ்மி மணிவண்ணன்