சுயநலவாதியின் டைரியிலிருந்து
பிராங்க்ளின் AJ எழுதிய 'சுயநலவாதியின் டைரி' கவிதைத் தொகுப்பு, வாழ்க்கையின் வலிகளைப் பேசும் ஒரு வித்தியாசமான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | இறைவி வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
“போயும் போயும் அம்மா சேலையையா தற்கொலைக்கு தேர்ந்தெடுப்பேன் அவள் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது” மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில். இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மாளின் ஒவ்வொரு சேலையையும்.– கவிஞர் க்ரிஷ் பாலாதன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவாதியாக பிறரால் அடையாளப்படுத்தப்படுவான். ஆனால் அவனே தன்னை ஒரு சுயநலவாதியென்று எழுதிய நாட்குறிப்பு ஒரு கவிதை தொகுப்பாக நம்மிடம்…– எழுத்தாளர் இனிதிஇக்கவிதை தொகுப்பு கவிஞர்களின் இயல்பான போக்கில் இருந்து மாறுபட்ட சிந்தனைகளோடு களம் இறங்குகிறது.வாசகர்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை நிச்சயம் கொடுக்கும்.– கவிஞர் மெஹராஜ் இஸ்மாயில்எதார்த்தமான எதிர்பார்ப்புகள், அடிப்படை ஆசைகள், கடந்துவந்த ஏமாற்றங்கள், ஏற்றுப் பழகிய வலிகளின் கலவையாக இருக்கிறது இந்த ‘சுயநலவாதியின் டைரி… சுயநலவாதிகள் தான் சுயத்துடன் இருப்பார்கள் போலும்!– அனீஸ் ஃபாத்திமா (இறைவி)‘ஆறு மனிதர்களும் ஆறு தொலைபேசிகளும், சிக்னல், இதே உலகில் தான், அந்தரங்கம், நான் தான்’ போன்ற கவிதைகளை வாசிக்கும்போது மனதில், நிற்பதோடு நீங்கா இடமும் பிடிக்கின்றன.– கவிஞர் சரண் பாபு
