Skip to content

ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?

₹100.00

ஜான் மார்ஷலின் பங்களிப்புகள் மற்றும் அவர் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதை அறிய இந்த புத்தகத்தை வாசியுங்கள்.

Category Essay
Publisher ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Archaeology , History , Indian History

Description

தொல்லியல் ஆய்வுகளின்வழி இந்திய வரலாற்றை வளர்த்தெடுத்ததோடு இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பண்பாட்டுச் சின்னங்கள், தொல்பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பாகவும், அகழாய்வு இடத்தில் வைத்து, அருங்காட்சியங்கள் உருவாக்குதல் தொடர்பாகவும் முன்னோடி செயல்பாடுகளை மேற்கொண்டவர் ஜான் மார்ஷல்தான். தனது வாழ்நாள் முழுவதும் இந்தியத் தொல்லியல் கழகத்திற்காக அர்ப்பணித்தவர்.இந்தியத் தொல்லியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமையாக திகழ்ந்தவர் ஜான் மார்ஷல் குறித்து தமிழ்நாட்டில் தவிர, வேறு எங்குமே யாருமே பொதுவெளியில் பேசுவதில்லை, ஏன்? அவரின் பங்களிப்புகள் குறித்து பேசமால் மௌனமாய் இருக்கின்றனர், ஏன்? அல்லது அவருக்குப் பதிலாக, அவர் செய்த பணிகளை மற்றவர்களின்மீது ஏற்றி வைத்துப் பேசுகின்றனர், ஏன்? ஜான் மார்ஷலுக்கு மட்டும் ஏன் இந்த வஞ்சனை?இத்தகைய கேள்விகளின் ஊடாக எழுந்ததே இந்த ‘ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்?’ என்ற நூலாகும். இந்நூலை எழுதத் தொடங்கும்போதே, அவர் கொண்டாடப்பட்டததற்கான காரணமும் தெளிவாகத் தெரிந்தது. அதேநேரத்தில் மற்றவர்களால் அவர் கொண்டாடப்படாமல் இருப்பதற்கான காரணங்களும் அறிய முடிகிறது. இந்நூலை வாசிப்பதன்மூலம் வாசகர்களும் அதனைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.