நதியைத் தேடும் கடல்
சங்கர் மகாதேவனின் 'நதியைத் தேடும் கடல்' கவிதைத் தொகுப்பு! காதல் மற்றும் பிரபஞ்சத்தின் அழகை உணர்த்தும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | Suvadu Pathippagam |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
Description
காதலில் தொடங்கிக் கடலில் முடிகின்றன இந்தத் தொகுப்பின் கவிதைகள். நதி, கடல் இரண்டையுமே காதலின் குறியீடாகவே உணர்கிறேன். நதி - மானுடக் காதல் எனில், கடல் - பிரபஞ்சக் காதல். இந்த இரண்டுக்குமிடையே அவர் பார்த்ததை உணர்ந்ததை எழுதிப் பார்க்கிறார்.உயிரெழுத்திலிருந்தே நாம் மொழியைக் கற்கத் தொடங்கு கிறோம். காதலை எழுதிப் பார்ப்பதிலிருந்தே எழுத்தும் தொடங்குகிறது. காதல் என்பது தன்னையே ஒப்புக்கொடுக்கும் மனோபாவம். 'காதல் என்ற அந்த மகா மடத்தனம் அறம் சார்ந்தது; அதிகாரம் சார்ந்தது அல்ல' என்று சி.மோகன் சொல்வார். இங்கிருந்துதான் சங்கர் மகாதேவன் எழுதத் தொடங்குகிறார்.நதிகளெல்லாம் கடலில் கலக்கும் என்பது பொது விதி. பொது விதியிலிருந்து விலகி யோசிப்பவனும் எழுதுபவனுமே நவீன கவிஞன். சங்கர் மகாதேவனின் கவிதைப் பயணம் இந்த நூலிலிருந்து வெற்றிகரமாகத் தொடங்கிவிட்டது.-கவிஞர் அமிர்தம் சூர்யா
