Skip to content

கடற்புறத்து நற்செய்திகள்

₹500.00

கேரள கடற்கரைப் பகுதி மக்களின் வாழ்வியலைச் சொல்லும் 'கடற்புறத்து நற்செய்திகள்' நாவல்! பிரான்சிஸ் நொறோணாவின் சிறந்த படைப்பு.

Category Novel
Publisher Suvadu Pathippagam
Language Tamil
Year 2023
Format Paperback

Description

பிரான்சிஸ் நொறோணாவின் படைப்புகள் பெரும்பாலும் கடற்புறத்து மக்களின் வாழ்வி யலைப் பேசுகின்றன. மலையாள இலக்கிய உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட லத்தீன் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் இவரது படைப்புகள் அமைந் துள்ளன. இதுவரை வெளியாகியுள்ள இலக்கி யங்களில் 'கடற்புறத்து நற்செய்திகள்' என்ற இந்த நாவல் ஆலப்புழை கடற்கரைப் பகுதி மக்களின் வாழ்வியலைப் பேசும் ஒரே நாவலாகும்.கடற்புறத்து நற்செய்திகள் என்ற இந்த மொழிபெயர்ப்பு நாவல் கேரள நெய்தல் படைப்பு என்ற நிலையில் தமிழில் அறிமுக மாகிறது. தகழியின் செம்மீன் நாவல் தமிழில் வெளியாகி அறுபது ஆண்டுகளுக்குப்பின் இத்தகைய நாவல் வெளிவருகிறது. நூறு வருட காலத்தைத் தனக்குள் அடக்கிக் கொண்டு நகரும் இந்த நாவல், கால அடிப்படையில் 1910இலிருந்து 2004 வரையுள்ள காலகட்டத்தையும் அக்காலகட்டப் புற வரலாறுகளையும் பதிவு செய்கிறது.அருட்தந்தை றைனோல்ட்ஸ் புரைய்க்கல் என்பவரின் வாழ்வி னூடாகப் பயணிக்கும் இந்நாவல் அன்றைய காலகட்டங்களின் நெய்தல் நில மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துன்பங்கள், சாதிய ஏற்றத் தாழ்வுகள், அவர்களது அவலம் ததும்பும் வாழ்வியல், கிறித்தவம் அடைந்த மாற்றங்கள், கிறித்தவம் குருமடம் சார்ந்து நிலவிய சாதியப் பாகுபாடுகள் எனப் பலவற்றையும் பேசுகிறது.-முனைவர் கி. நாச்சிமுத்துமேனாள் ஒருங்கிணைப்பாளர், சாகித்ய அகாடெமி (தமிழ்)