இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்
திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு பெற்றது
₹300.00
20-ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 தமிழ்க் கவிஞர்களைப் பற்றிய விரிவான ஆய்வு. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியப் புத்தகம்!
| Category | Report |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | History , Literary Criticism , Poetry , Tamil Literature |
Description
அமிழ்தினும் இனிய தமிழ்மொழி தொன்மைச் சிறப்பும் நெடிய மரபும் கொண்டது. தமிழ்க்கவிதை வளர்ச்சி இரண்டாயிரம் ஆண்டு கட்கு மேலான வரலாறு உடையது. சங்ககாலம் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்கள், காவியங்கள், நீதி நூல்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப் பாடல்கள் எனப் பல்வேறு வகை இலக்கியங்கள் தொன்றியுள்ளன. அவ்வக்கால கட்டத்தில் முன்னர்த் தோன்றிய நூல்களே பின்னர் வந்த நூல்களுக்கு வழிகாட்டியாகவும் மரபாகவும் அமைந்தன.
