தமிழில் நாவல் கலை
சு. வேணுகோபால் எழுதிய 'தமிழில் நாவல் கலை' நாவல் இலக்கியத்தின் சாதனைகள் மற்றும் சாத்தியங்களை ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Novel , Tamil Literature |
Description
சு. வேணுகோபால் தமிழின் தனித்துவமான படைப்பாளி, நிதானமும் ஆழமும் மானிடப் புதிர்களும் கலை மேன்மையோடு இவரது படைப்புகளில் அற்புதமாகக் கூடி வந்திருக்கின. இதே வகையில் இவரது கட்டுரைகளும் இலக்கியத் தரத்தால் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் நாவல் இலக்கியம் குறித்து குறைவாகவே பேசப்பட்டு வந்துள்ளன. இந்த நூலில் சு. வேணுகோபால் தமிழ் நாவல்களில் நிகழ்ந்த சாதனைகளையும் மேலான படைப்புகளையும் எடுத்துக்கொண்டு விரிவாக ஆராய்திருக்கிறார். அதன் வழி நாவல் கலையின் சாத்தியங்கள் குறித்தும் அதில் ஏற்பட்டுள்ள குறைகள், விசால குணம் மறைந்த தன்மைகள் குறித்தும் ஆழமான தனது பார்வையை முன்வைத்துள்ளார். நாவல் கலையை விரிந்த தளத்தில் இன்னும் மேலான இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கனவு நூல்முழுக்க விரவி தொழில் பட்டிருக்கிறது. தமிழ் நாவல் இலக்கியத்திற்கு இந்நூல் தனித்துவமான கொடை.
