Skip to content

காலம் வழங்கிய கொடை தாராபாரதி

தாராவை ஆராதிப்போம்

₹70.00

தாராபாரதியின் கவிதைகள் பற்றிய ஒரு ஆழமான இலக்கிய ஆய்வு. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher கௌரா பதிப்பகக் குழுமம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Literary History , Poetry Criticism , Tamil Literature

Description

தமிழ்மொழியின் இளமைக்கும் வளமைக்கும் புதுமைக்கும் புதுமையாய் ஒளிர்வதற்கு அதன் கவிதை வடிவமே அடிப்படை அடையாளமாக இருக்கிறது. அது காலந்தோறும் சொற் புதிது சுவை புதிது பொருள் புதிதாய் பூத்துக்குலுங்கிக் கொண்டிருக்கிறது. ஆசிரியம், விருத்தம், கலி, வஞ்சி, ஹைக்கூ, துளிப்பா எனப் பல்வேறு வடிவங்களைப் பெற்றுள்ளது. உணர்ச்சித் துடிப்பும் நெருப்பின் வார்ப்பும் உள்ளத்தைத் தூண்டி விழித்தெழச் செய்யும் சிறப்புக் கவிதைக்கு உண்டு.பாரதியாரின் உணர்ச்சி வார்ப்பும், பாவேந்தரின் அறிவுப் புரட்சியும், சுரதாவின் உவமை நலமும் ஒருங்கே கைகோத்து நடைபோடும் வார்ப்பாக அமைந்தது கவிஞாயிறு தாராபாரதியின் கவிதைகள். ஒற்றைவரியில் உலகை அளக்கும் வகையில் அவருடைய கவிதை வரிகள் அமைந்திருக்கும்.வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்விரல்கள் பத்தும் மூலதனம்என்னும் கவிதை வரியே சான்று.