மணிமேகலையின் பௌத்தப் பேரறம்
மணிமேகலையின் பௌத்தப் பேரறம்: அறம் மற்றும் பௌத்த தத்துவத்தை ஆராய்கிறது. அரங்கமல்லிகா எழுதிய சிறந்த புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | தமிழ் மரபு அறக்கட்டளை |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Buddhism , Ethics , Philosophy , Tamil Literature |
Description
அறத்தொடு நிற்க..! அறம் என்பது வெறும் சொல்லல்ல: அது மனிதவாழ்வின் எண்ணம் சொல், செயல், வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மகாதெய்வீகம் உலகத்தில் யாரிடமிருந்து வேண்டுமானாலும் தப்பித்துக் கொள்ளக்கூடும். அறத்தினிடமிருந்து ஒருக்காலும் தப்பிக்கவே இயலாது. அறம் போற்றுவோரை அறம் நின்று போற்றும். அறத்தை வீழ்த்த நினைப்போரை அறமே நின்று பேராசிரியர் அரங்கமல்லிகா வீழ்த்தும். அறம் வரமும் ஆகும். அறம் கூற்றும் ஆகும்.அறமற்றவர்கள் உலகிற்காக எழுத்தைத் தொடுவது தக்கதாகாது. அறத் தைப் போற்றும் முயற்சியில் எழுத்தைத் தொட்டவர்களே உலகில் இன்றுவரை அழியாப் புகழை எய்தி, மரணமிலாப் பெருவாழ்வை வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அந்தவகையில், சங்க இலக்கியப் புலவர்கள் தொட்டு, ஒளவையார். கம்பர், பாரதி, பாரதிதாசன் போன்றோர்களைக் குறிப்பிடலாம்.அறம் நிலைத்து நிற்க பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்கள் அறத்தொடு நிற்கும் அறச்செல்வியாய் மணிமேகலையின் பௌத்தப் பேரறம் என்னும் அறத்தை எழுத்தாய் பதிவித்திருக்கிறார். அவர் எழுத்தும். வாழ்வும் அறத்தொடு நிற்கவும், அறம்பாடிய எழுத்துச் சித்தர்களின் பட்டியலில் அரங்கமல்லிகாவும், இடம்பிடித்து வாழ்வாங்கு வாழவும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..!அறம் பெருக..! ஆற்றல் பெருக..!-திருக்குறட்செல்வர். நல்ல. அறிவழகன்.
