Skip to content

கருநாடக இசை என்னும் தமிழர் இசை

₹80.00

தமிழர் இசையின் வரலாறு மற்றும் கருநாடக இசையின் தோற்றம் குறித்து அறிய இந்த நூலைப் படியுங்கள்.

Category Essay
Publisher ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Music , Musicology , Tamil Culture

Description

பேரா. அமுதா பாண்டியன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார். தமிழர்களின் இசை மற்றும் இசையியல் பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 'கருணாமிர்த சாகரம்' குறித்து ஆய்வு செய்து இரண்டு நூல்களை வெளியிட்டார். இவர் சங்க இலக்கியம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் முதலியவற்றை இசை நோக்கில் ஆய்வு செய்து, சங்க காலத்திலேயே தமிழர்களின் இசை செவ்விசையாக வளர்ந்திருந்தது என்று வாதிடுகிறார். தமிழர்கள் யாழ் மெட்டுகளைக் கொண்டு இசை கற்றதாகவும், பண்ணுபெயர்த்தல் முறையில் புதிய பண்களை உருவாக்கும் திறன் பெற்றிருந்ததாகவும் நிரூபித்துள்ளார். மேற்கத்திய இசையின் மேஜர் ஸ்கேல்களை ஒத்த ஏழு தாய் பண்களையும், சங்கராபரணம் தான் முதல் பண் என்பதையும் அவர் ஐயமின்றி நிரூபித்துள்ளார். சிலப்பதிகாரம் இசை இலக்கணத்திற்கான அடிப்படைக் கோட்பாடுகளைக் கட்டமைக்க உதவுகிறது என்றும், சரியான கோட்பாடுகள் மூலம் எண்ணற்ற இராகங்களை உருவாக்குவது எளிது என்றும் பேரா.அமுதா பாண்டியன் கூறுகிறார். இவரது ஆராய்ச்சி முடிவுகள் "Theory of Music in Classical Tamil: Tolkäppiyam through Cilappatikāram" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.