Skip to content

ஆபத்தில் கூட்டாட்சி

₹60.00

கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தும் வே. ஆனைமுத்துவின் 'ஆபத்தில் கூட்டாட்சி' புத்தகம்!

Category Essay
Publisher திராவிடன் ஸ்டாக்
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Federalism , Indian Politics , Language Policy

Description

இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொது மொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியா 'ஒற்றைநாடு' என்றால் இந்த வாதம் ஏற்கத்தக்கதே. ஆனால் இந்தியா 'கூட்டாட்சி நாடு' இந்தியச் சமூகம் பன்மைத் தன்மை கொண்டது. எனவே ஒரே ஒரு மொழியைப் பொது மொழியாக வைத்துக் கொள்வது ஏனைய மொழி பேசுவோருக் கெல்லாம் அநீதியைச் செய்வதாகிவிடும்.-1963-இல் நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசியது."பல்வேறு மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும். மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும் மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துகளை மத்திய அரசு ஏற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்"-1974-இல் கலைஞர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம்.