பாகீரதியின் மதியம்
₹890.00
கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் (1951-1970) - ஒரு நவீன தமிழ் எழுத்தாளரின் தனிப்பட்ட நாட்குறிப்புகள்!
| Category | Diary |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2026 |
| Tags | Biography , Cultural History , Tamil Literature |
எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் நாட்குறிப்பு இது. நவீன தமிழ் எழுத்தாளர் ஒருவரது நாட்குறிப்புகள் நூலாக வெளிவருவது இதுவே முதல்முறை. எழுத்தை மட்டுமே ஜீவனமாகக் கொண்டு வாழ்ந்த, முற்போக்குச் சாய்வுள்ள, முழுநேரத் தமிழ் எழுத்தாளரின் நாட்குறிப்புகள் இந்நூல்.ஒவ்வொரு நாட்குறிப்பிலும் உணர்ச்சி கலந்திருக்கிறது; அனுபவம் உள்ளோடியிருக்கிறது; இலக்கியம் வெளிப்படுகிறது; சுவாரசியம் குமிழ்விடுகிறது. சந்தித்த மனிதர்கள், நேர்ந்த சம்பவங்கள் பற்றி ஆழமான பார்வைகள் கொண்டது, பல சமயம் கண்ணிவெடிகளை ஒத்த விமர்சனங்களுடன் கூடியது.நெருப்பெனச் சுடும் வாழ்க்கையை எதிர்கொண்ட, அறத்தில் நம்பிக்கையுள்ள ஒரு கலைஞனின் தினசரிக் குறிப்புகள் இவை.