Skip to content

சங்குவான்

₹220.00

டானியல் ஜெயந்தன் எழுதிய 'சங்குவான்' கதைகள், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும், நிலங்களின் அவலங்களையும் சொல்கிறது.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2025
Format Paperback

Description

கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கிராமத்தில் தொடங்கி ஐரோப்பாக் கண்டம், பிரான்ஸ் தேசம்வரை டானியல் ஜெயந்தன் கதைகளின் நிலம் விரிந்துசெல்கிறது.இந்திய அமைதிப்படையினர் வருகை, உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூட்டங்கூட்டமாக மீன்பிடிப் படகுகளில் இலங்கையை விட்டு வெளியேறியமை, கோழிமுட்டைகளையும் பனங்கிழங்குகளையும் வேகவைத்து உண்டு பசியாறும் சாமானிய மக்கள், கழுத்து அறுபட்டு பிரெஞ்சு தேசத்தில் சாகும் இலங்கைப் பெண், கப்பலோட்டி டொங்கான் ஆகியோரின் கதைகளின் வழியாக இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையைக் கதைகளாக்குகிறார் டானியல் ஜெயந்தன்.இக்கதைகள் நிலங்களின் கதையையும் மனிதர்களின் அவலங்களையும் சொல்கின்றன. மொழியும் வடிவமும் கலைத்தன்மையும் இந்தக் கதைகளில் கூடியிருக்கின்றன.