Skip to content

இஜ்திஹாத்

நவீனகால சட்டச்சிக்கல்களை தீர்க்கப் பயன்படுத்துவதன் அவசியம்

---
₹20.00

இஜ்திஹாத்: நவீனகால சட்டச்சிக்கல்களை தீர்க்க இஸ்லாமிய சட்டத்தின் முக்கியத்துவத்தை அறிய இந்த புத்தகத்தை வாங்குங்கள்.

Category Essay
Publisher மெல்லினம்
Language Tamil
Year 2010
Format Paperback
Tags Islam , Law , Religious Studies , Social Issues

Description

இஸ்லாத்தில் குர்ஆன், சுன்னா மட்டுமே அடிப்படையான நிலையான இறுதியான மூலங்களாகும். இந்த மூலங்களை இடம், காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீட்சி செய்யும் செயல் வழக்கிற்குப் பெயரே இஜ்திஹாத். இஸ்லாத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இஜ்திஹாத் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது என்பதற்கு அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஏராளமான சட்ட (ஃபிக்ஹ்) ஆக்கங்கள், உரைகள், மறுஉரைகள், நடந்தேறிய விவாதங்கள், தோற்றம் கண்ட பற்பல சிந்தனைப் பிரிவுகள் ஆகியன சான்று பகர்கின்றன. இவ்வனைத்திற்கும் பின்னால், இறைச்சட்டத்தை புதுப்பொலிவுடன் மிளிரச் செய்ய வேண்டும் எனும் உயிரோட்ட உணர்வு இயங்கியது புலனாகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் விரிவடைந்து சென்றதன் விளைவாக புதுப்புது விதமான சமூக, பொருளாதார, பண்பாட்டு, ஒழுக்க, அரசியல் சக்திகளும் பிரச்சனைகளும் அலைகடலாக எழுந்து முஸ்லிம் சமுதாயத்தை திணறடிக்கச் செய்த சமயத்தில் சமுதாயம் இருவித தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டது. ஒன்று, பதறிப்போய் மிரண்டு தமது இறந்த காலத்திய வழக்கில் தஞ்சம் தேடி அதிலேயே உறைந்து விடுதல். மற்றொன்று, தமது அசல் இலட்சியங்களையே விட்டுக்கொடுத்து புதுவித சக்திகளுக்குப் பணிந்து வளைந்து விடுதல்.முஸ்லிம் சமுதாயம் இவ்விரு நிர்ப்பந்தங்களுக்கும் பலியாகாமல் மூன்றாவது வழிமுறையொன்றை கையாண்டது. தன்னம்பிக்கையோடு புதிய சக்திகளை எதிர்கொண்டது. தமது சொந்த —குர்ஆன், சுன்னாவின் அடிப்படையிலான— இலட்சியங்கள் மற்றும் நெறிகளுக்குப் பொருந்துமாறு ஈர்த்தல், ஜீரணித்தல், புறக்கணித்தல், மாற்றியமைத்தல் ஆகியவை அடங்கிய முற்போக்கான புத்தாக்கச் செயல்பாட்டில் (Positive Creativity) ஈடுபட்டு சவால்களை சமாளித்தது. சமுதாயத்தின் இவ்வாக்கப்பூர்வமான முயற்சியை சாத்தியப்படுத்தியது அறிஞர்களின் உழைப்பே. இவர்கள் புதிய காரணங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்கங்களையும் கருத்தில் கொண்டு குர்ஆனின் போதனையையும் இறைத்தூதரின் சுன்னாவையும் புத்தாக்கப்பூர்வமாக விரிவுபடுத்தி வியாக்கியானம் அளித்தனர். மாறிய, புதிய நிலைமைகளில் சமுதாயம் சுதந்திரமாகச் செயல்பட ஓர் சிந்தனைக் கட்டமைப்பை உருவாக்கி தந்து கொண்டு இருந்தனர். இஜ்திஹாத்- இஜ்மா- இஜ்திஹாத் எனும் செயல் தொடரின் வாயிலாக சுன்னாவை வாழவைத்து முன்னெடுத்துச் சென்றனர்.