மக்கள் வரலாறு தொடக்கமும் தொடர்ச்சியும் தொகுதி – 1
மக்கள் வரலாறு தொகுதி 1: தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணத்தை சுபாஷினி அவர்களின் எழுத்தில் அறியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தமிழ் மரபு அறக்கட்டளை |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History , Social History , Tamil Culture |
Description
தான் வாசித்த நூல்கள், தொடர் ச்சியான பயணங்கள், அங்கு பார்த்தவை. கிடைத்த அனுபவங்கள், பழகிய மனிதர் கள் என்று அனைவரையும் நினைவிலிறுத்தி நூலாசிரியர் நூலில் பதிவு செய்திருக்கிறார். இப்பதிவுகளின் வாயிலாகத் தொடக்கம் முதல் இன்று வரையிலும் தமிழ் மரபு அறக்கட்டளை கடந்து வந்த பாதையில் நம்மையும் சேர்த்துப் பயணிக்க வைத்திருக்கிறார்.நாம் அறிந்ததை, கற்றதை ஆவணப்படுத்துவதும், பலருக்குச் சொல் வதும் மிக அவசியமானது. அதற்கு ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் தமது வாசிப்பில், ஆய்வில் உண்மையை அறியும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அதுவே ஆக்கபூர்வமானது. அத்தகைய ஆக்கபூர்வமான ஆய்வுப் பணியே உண்மையான ஆய்வு என்பதை வலியுறுத்துகிற ஆய்வாகவும் இந்நூல் அமைகிறது.தமிழர் வரலாறு தொடர்பான ஒன்று என்றால் எப்படியாவது நேரில் சென்று அறிய வேண்டும் என்கிற ஆர்வம், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற துடிப்பு கொண்ட க. சுபாஷிணி அவர்களின் கட்டுரைகளை வாசிக்கும்போது அனைத்தையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் என்னுள் ஏற்பட்டது. கற்றல் என்பது நேரடிப் பயணங்கள் மற்றும் களப்பணி ஊடாக நிகழ வேண்டும் என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவரும் உணர்ந்து கொள்வர்.-முனைவர். மு.இறைவாணிதொகுப்பாசிரியர்
