Skip to content

நெருப்புக் குழியில் குருவி

இயற்கை பாதுகாப்பில் இலக்கிய அரசியல் மீதான விமர்சனம்

₹90.00

ச. முகமது அலியின் 'நெருப்புக் குழியில் குருவி' சுற்றுச்சூழல் மற்றும் இலக்கிய அரசியலை விமர்சிக்கும் ஒரு முக்கியமான கட்டுரை.

Category Essay
Publisher அங்குசம் பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Ecology , Environmentalism , Literary Criticism

Description

உலகம் சூடாகிறது என்று சொன்னாலும் சொன்னார்கள் சுற்றுச்சூழல் பற்றி பேசுவது இன்று பலருக்கு ஃபேஷனாகிவிட்டது. இயற்கைப் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் சரியாக புரிந்து கொண்டு பேசுபவர்கள் இங்கே ரொம்பவும் குறைவு என்கிறார் இயற்கையியலாளர் ச. முகமது அலி.‘‘நமக்கு பயன்படக்கூடிய உயிரினங்கள் மட்டும் இந்த உலகத்துல இருந்தா போதாதாங்கிற கேள்வி பலருக்கு வர்றதுண்டு. உண்மையில் இயற்கைளோட ஒவ்வொண்ணும் பிணைந்துதான் இருக்கு. உதாரணத்துக்கு நீலகிரி மலையில வசிக்கிற இருவாசிப் பறவை அழிஞ்சதுன்னா அதோட தொடர்புடைய பத்து வகையான மரங்களும் அழிஞ்சிடும். காரணம், இருவாசிப் பறவை சாப்பிட்டு வெளியேற்றுகிற விதைகளுக்குத்தான் முளைக்கும் திறன் இருக்கு.அதனாலதான் மரங்கள் செழித்து வளருது. இப்படி நம்மைச் சுற்றியிருக்கி பல்லுயிர்களும் செழிப்பா இருந்தாதான் நாமும் செழிப்பா இருக்கமுடியும்’’ என்கிறார் ச. முகமதுஅலி.