மேதைகளின் குரல்கள்
சினிமா இயக்குனர்களின் ஆழமான நேர்காணல்கள்! சமூக சாட்சி, கலை மற்றும் மனித அறம் குறித்து அவர்களின் குரல்கள்.
| Category | Interview |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Arts , Culture , Film , Interviews |
Description
இந்நூலில் இடம்பெற்றுள்ள இருபது இயக்குநர்களிடத்திலும் ஒரே ஸ்தாயிலான ஒற்றுமையைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவருமே தாம் வாழுகிற சமூகத்தின் சாட்சித்தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சமூகத்தோடு இணைந்தும் இயங்கியும் தங்கள் இயல்புகளை காட்சிப்படுத்துகிறார்கள்.மேலும் இவர்கள் அனைவருமே கட்டுப்பாடில்லாத கனவுகாண்பவர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக இவர்களது கனவுகளின் மையம் என்பது கலையின் வழியே மனித அறத்தினை நிலைபெற வைக்கக்கூடியதாக இயங்குகிறது. அன்பையும், அறத்தினையும் தங்கள் காட்சிகளின் பேசுபொருளாக கையாளுகிறார்கள். திரைக்கதையினை அமைப்பதில் துவங்கி அப்படைப்பினை உலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது வரையிலும் படைப்புத் தன்மையின் மீது தீவிரப் பற்று கொண்டவர்களாகவும் திகழ்கிறார்கள் என்பதே இந்நேர்காணல்கள் நமக்கு அழுத்தமாக பதிவு செய்யும் உண்மையாகும்.
