Skip to content

காலசர்ப்பம்

₹210.00

காலசர்ப்பம் நாவல், மனித வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிய ஒரு கதை. காலம் எனும் பாம்பின் வாயில் சிக்கியவர்களின் போராட்டங்களை அறியுங்கள்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது மனித வாழ்க்கை. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்ற விசாரம் இல்லாத மனிதர் அரிது. இந்நாவலின் மையப் பாத்திரங்கள், குறிப்பாகப் பெண்கள் அத்தகையச்சூழலுக்கு ஆட்பட்டு விசும்புகின்றனர். எனினும் காலம் எனும் பாம்பின் வாயில் சிக்கிய நுணலைப்போல் ஏக்நாத்தும், அங்கிதாவும் புறத்தால் பெரும் சேதமடைகின்றனர். காலைச் சுற்றி கழுத்தை நெருக்கும் இன்னல்களைக்கண்டு, மனம் வாடி ஆண்கள் சோர்ந்துவிட அவர்களிலிருந்து மாறுபட்டு நிற்கிறான் ஏக்நாத். பெண் பாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு கணத்தில் அசாத்திய சக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். அவை, கடைசி அத்தியாயத்தில் பரிபூரணத்தை எட்டுவதால், கால சர்ப்பத்தின் மாய வசீகரம் வாசகர்களையும் தீண்டி விடுகிறது.