தத்துவத்தின் சித்திரவடிவம்
நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய 'தத்துவத்தின் சித்திரவடிவம்' நவீன தமிழ் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Philosophy , Tamil Literature |
Description
அல்பெர் காம்யூவையும் ஃபூகோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிறதுறைகளைப் போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளைக்காட்டிலும், அந்த அண்டைவீட்டுக்காரனின் சொந்தச் சாதனையைப் புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வளர்ச்சியிருக்கிறது என நம்பும் பலரில் நானும் ஒருவன். உலக இலக்கியங்களில் தற்போது என்ன நடக்கிறதென்ற ஒப்பீடு மட்டுமே நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமென்பது எனது நம்பிக்கை, அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்.- நாகரத்தினம் கிருஷ்ணா
