முதல் தலைமுறை மனிதர்கள் – பாகம் 2
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் வரலாற்றை அறிய முதல் தலைமுறை மனிதர்கள் - பாகம் 2 புத்தகத்தை வாங்குங்கள். சேயன் இப்ராஹீம் எழுதியது.
| Category | Report |
|---|---|
| Publisher | யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History , Islam , Tamil Literature |
Description
என் இனிய நண்பர் சேயன் இப்ராகிம், இன்றைய தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் எழுத்துச் சிற்பி. கடையநல்லூர் கண்டெடுத்துக் கொடுத்திருக்கும் கடமை தவறாத எழுத்து வேந்தர். அவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வுக் கட்டுரைகளைத் தந்து வருகிறார். கடல் கடந்து வாழும் தமிழ் முஸ்லிம்களுக்கும் அவரின் எழுத்து விருந்தாகி வருகிறது “முதல் தலைமுறை மனிதர்கள் – II” என்னும் இந்தத் தொகுப்புப் பனுவலில் 31 முஸ்லிம் சமுதாய முத்துக்களைப் பொறுக்கி எடுத்துப் பொன்மாலையாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் வானில் ஒளி சிந்திய விண்மீன்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து அளித்திருப்பது போல இந்நூல் அமைந்திருக்கிறது.-பேராசிரியர் கே. எம். காதர் மெதகிதீன் Ex.M.P., (தேசியத் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
