Skip to content

இலக்கியத்தில் விருந்தோம்பல்

₹200.00

தமிழர் விருந்தோம்பல் பண்பாட்டை சங்க இலக்கியம் முதல் நவீன படைப்புகள் வரை விவரிக்கும் நூல்.

Category Essay
Publisher கற்பகம் புத்தகலாயம்
Language Tamil
Format Paperback
Tags Hospitality , Tamil Culture , Tamil Literature

Description

சங்கத் தமிழர் மரபின் தொடர்ச்சியாகக் கருதப்படும் நவீன வாழ்க்கையிலும் காதல், வீரம், விருந்தோம்பல், நட்பு போன்ற சொற்கள் முக்கியமானவைதான். வீட்டுக்கு வரும் முன் பின் அறிமுகம் இல்லாதவரை உபசரித்தல் தமிழர் பண்பாட்டில் சிறப்பானது என்ற எண்ணம் இன்றைக்கும் நிலவுகிறது. ஆனால், இன்று விருந்தோம்பலைக் கொண்டாடும் போக்கு தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறதா என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்வோம். இந்தப் பின்னணியில், விருந்தோம்பலின் சிறப்புகளைச் சமகாலத் தமிழர்களிடம் நினைவுபடுத்திட வேண்டியுள்ளது. அந்தப் பணியை இந்த நூல் வழியாகச் செய்திருக்கிறார் இறையன்பு. விருந்தோம்பல் என்ற உன்னதமான செயல்பாடு காலந்தோறும் தமிழர்களிடம் எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்பதைச் சங்க இலக்கியம் தொடங்கி சமகாலப் படைப்புகள் வரை எளிய மொழியில் இந்நூலில் விவரித்துள்ளார். விருந்தோம்பல் என்ற சொல்லைத் தங்களுடைய படைப்புகளில் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் எவ்வாறெல்லாம் மேன்மைப்படுத்தியுள்ளனர் என்ற விவரிப்புகள் காத்திரமானவை.