தழல்
₹300.00
நிழலியின் 'என் தேநீருக்கு உன் சுவை' கவிதைகள் தேநீரின் சுவையுடன் காதல், ஏக்கம், குடும்ப உறவுகளைப் பேசுகிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
காதலன் விட்டு விலகியபோது அருந்திய தேநீர் அதன் கசப்பான நினைவைக் கொண்டுவருதல், அன்றாட வாழ்வில் உருவாகும் குடும்பச் சுமைகளைத் தாங்குதல், இப்படித் தேநீர் ஒருவருக்குத் தரும் அணுக்கத்தைப் பல நிலைகளில் கவிதைகளாக்கியுள்ளார்.தேநீர் அவரையும் அவரைச் சுற்றியுள்ள உலகத்துடன் ஆன உறவை, தொடர்பை மேம்படுத்துவதாக அமைகிறது. காதல் ஏக்கம், பிரிவு ஏன் காதலின் முத்தம் என்ற இன்ப நிகழ்வுக் கூட ஒரு கோப்பைத் தேநீரில் உணரமுடியும் என்பதைச் சொல்வது வாசிப்பவரின் கூருணர்வைத் தீட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. உலகம் என்பதே ஒரு கோப்பைத் தேநீருக்கு சமம் என்ற அளவில் இக்கவிதைகளின் உள்ளுறை அமைந்துள்ளது.- ஜமாலன்