மனக்கோவில் வாழும் உமையே !
கவிஞர் செல்ல கணபதி எழுதிய 'மனக்கோவில் வாழும் உமையே' கவிதைகள், கவியரசரின் தத்துவங்களை உணர்த்தும் ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
'மனக்கோவில் வாழும் உமையே' என்னும் இந்நூல். கவியரசரின் தத்துவ அடிகளைப் படித்துப் படித்துத் துய்த்துத் துய்த்து நான் பெற்ற சுகானுபவத்தின் வெளிப்பாடுகளே இக்கவிதைகளில் மிக அதிகம். வள்ளுவன் காலம் தொட்டு அடிப்படை நியாயங்கள் என்றும் ஒன்றுதான். அவற்றைச் சொல்லுகின்ற பாரதிதாசன். கண்ணதாசன் என்று தனித்தனி முத்திரைகள் உருவாயின. இவர்களுள் கண்ணதாசனை நான் ரசித்தபோது ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வுகளின் அதிர்வலைகளை இக்கவிதைகள். கவியரசரில் நான் ஒரு துரும்பு; துகள். இந்தத் துரும்பின் பாடலையும் கவியரசர் கண்ணுற்று, மனம் கனிந்து, ''நல்லதமிழ் விளையாடும் நற்கவிதைத் தோட்டம்'' என்று என்னை வாழ்த்தியதைப் பெறற்கரிய பேறாகக் கருதுகிறேன்;மிகப் பெரிய விருதாகப் போற்றுகிறேன.
