Skip to content

செந்நா வேங்கை

வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில்

₹1000.00

ஜெயமோகனின் செந்நா வேங்கை: மகாபாரதப் போரின் பிரம்மாண்டமான சித்தரிப்பு! குருக்ஷேத்திர களத்தின் உயிரோட்டமான காவியம்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language Tamil
Year 2020
Format Paperback

Description

மகாபாரதப்போர் நிகழ்ந்த குருக்ஷேத்திரக் களம் மெல்லமெல்ல உருவாகி எழுவதன் பெருங்காட்சியைக் காட்டும் நாவல் இது. அங்கே இரு தரப்பினருடைய படைகளும் வந்து சேர்கின்றன. முகத்தோடு முகம்நோக்கி நிற்கின்றன. போர் அணுகுகிறது. ஒரு பெருவேள்விக்கான ஒருக்கங்கள் போல. முதற்குருதி விழுகிறது. எரியில் விழும் முதல்துளி நெய்போல. போரெழுகையின் ஓவியம் இந்நாவல். போர் என்பது புறத்தே நடப்பது மட்டுமல்ல. குருக்ஷேத்திரம் எவ்வகையிலோ எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து உயிர்களிலும். அனைத்து உடல்களிலும். அனைத்து உள்ளங்களிலும். இது அந்த முடிவிலாச் சமரின் கதை.