எட்டுவழிச்சாலை எதிர்ப்பு
விவசாயிகள் கடந்து வந்த பாதை
எட்டுவழிச்சாலை எதிர்ப்புக் கழகத்தின் போராட்ட வரலாறு! விவசாயிகளின் குரலை நசுக்கும் அரசின் ஒடுக்குமுறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
| Category | Report |
|---|---|
| Publisher | போதி வனம் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Agriculture , Environmental Issues , State Terrorism |
Description
பாதிக்கப்படும் விவசாயிகளின் குரலை கொடூரமாக நசுக்கி அழிக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஒடுக்குமுறைகளை மீறி இீன்று விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இன்றும் இப்போதும் 'எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்', மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) முதலான அரசியல் கட்சிகளின்் விவசாயிகள் அமைப்புகள் களத்தில் நின்று போராடிக் கொண்டுள்ளன. காவல்துறை போராட்டத்தை ஒடுக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறது. போராடும் அமைப்புகளில் ஒன்றான 'எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்' சார்பாக இப் போராட்ட வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல் இது.எட்டுவழிச்சாலையின் அரசியல், பொருளாதார நோக்கங்கள் மற்றும் அது ஏற்படுத்த உள்ள இயற்கை அழிப்பு ஆகியவை குறித்த எனது விரிவான முன்னுரை இந்நூலில் உண்டு.- அ. மார்க்ஸ்
