Skip to content

இலட்சிய வரலாறு

₹90.00

அறிஞர் அண்ணா எழுதிய 'இலட்சிய வரலாறு' புத்தகத்தில், தமிழ்நாட்டின் இலட்சியத்தையும், புரட்சியின் முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Politics , Social Reform , Tamil History

Description

தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டான். மங்கியிருந்த இலட்சியம், மீண்டும் உலவலாயிற்று! இம்முறை நேரடியாக, மக்கள் மன்றத்துக்கு இலட்சியம் போய்ச் சேர்ந்தது! ஆகவே அந்த இலட்சியத்துக்கு புதியதோர் சக்தி ஏற்பட்டு விட்டது. மக்களுக்கு, தாங்கள் ஒரு இலட்சியத்துக்காகப் பணியாற்றப் போகிறோம் என்ற ஆர்வம் ஏற்பட்டது......புரட்சி என்பது இயங்கும் சக்தி ! அதைப் பொசுக்கிவிட யாராகிலும் ஆகாது. புரட்சி என்பது மக்களின் போராடும் சக்தியின் வழி வருவது. புரட்சி வாலிபத்தின் கூறு! பகுத்தறிவாளர் ஆயுதம். பழமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சாதிகாரிகள், சர்வாதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு, எனவேதான், அத்தகையோர் புரட்சி என்ற சொல்லைக் கேட்டதும் மருட்சி அடைந்தே விடுவர். நீண்டு வளர்ந்து நிற்கும் நெடு மரங்களும் அசைந்து, ஆடி, சுழன்று, அடி அறுபட்டு, விழுந்து நொறுங்கும். சூறாவளி வரின், அதைப் போன்றே ராணுவம், பொக்கிஷம், கர்வம், கபடம், ஆணவம், அகந்தை ஆகிய எல்லா ஆயுதங்களையும் ஒருங்கே படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என இறுமாந்து கிடந்த எத்தனையோ எதேச்சாதிகாரிகள் இடர்ப்பட்டு, இடிபட்டு கீழே உருண்டனர், புரட்சியின் வேகத்தைத்தாங்கமாட்டாது.-புத்தகத்திலிருந்து