பிரதாப முதலியார் சரித்திரம் (சுருக்கப் பதிப்பு)
தமிழின் முதல் நாவல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் - தமிழின் முதல் நாவல், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் மற்றும் அழகான கதை நடையுடன்!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 125 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் சுவாரசியமான நாவல் 140 ஆண்டுகளுக்கு முன்னால் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது. தமிழின் முதல் நாவல். கருத்து வளமும், வசீகரமான நடையும் கொண்டது. அது வெளியான காலத்தில் இருந்து தொடர்ந்து படிக்கப்பட்டு வருகிறது. பிரதாப முதலியார் சரித்திரத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஞானாம்பாள். அழகும் அறிவும் கொண்ட அவள் கல்வி, பண்பாடு ஆகியவற்றால் பெண்கள் அடையும் முன்னேற்றம் பற்றியதின் குறியீடாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறாள். பிரதாப முதலியார் சரித்திரம் சுமார் 400 பக்கங்கள் கொண்ட நாவல். அதனை சுவை குன்றாமல் 125 பக்கங்களுக்குச் சுருக்கி ஒரு வரிகூட மாற்றி எழுதாமல் பாரதி புத்தகாலயம் நூலாகக் கொண்டு வந்துள்ளது.
