Skip to content

உலக இலக்கியம் (சந்தியா பதிப்பகம்)

₹150.00

உலக இலக்கியம் பற்றிய க. நா. சு. அவர்களின் ஆழமான கட்டுரை! இலக்கிய ஒப்பீடு மற்றும் விமர்சனங்களை ஆராயுங்கள்.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Comparative Literature , Literary Criticism , Literature

Description

ஜப்பானில் கவிதை 8ஆவது நூற்றாண்டு முதல் வழக்கிலிருந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. சங்கத் தொகுப்பு நூல் போல 4440 கவிதைகள் அடங்கிய ஒரு பழங்கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது. மன்யோஷா என்று பெயர்....தமிழில் சங்க இலக்கியத்தில் உள்ளது போலக் "கையேந்தும் கவிதைகள்" இதில் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். எந்தச் சமுதாயக் கட்டாயத்தில் தமிழில் இத்தனை கையேந்தித் குருமவான்களைப் புகழும் கவிதைகள் உண்டாயின என்பது தெரியவில்லை. ஏற்பதிகழ்ச்சி என்று சொல்லிக்கொண்டே புலவர்கள் கொடுப்பவர்களைத் தேடியலைந்திருப்பது தமிழில் ஒரு மரபாக வந்திருக்கிறது. நானும் அந்த மரபில் வந்தவன்தான்.ஷேக்ஸ்பியர் சொல்வதும், யாயும் ஞாயும் யாராகியரோ என்று செம்புலப்பெயல் நீரார் சொல்வதும், "பழசு என்பதில் பெருமை யில்லை; புதுசு என்பதில் சிறுமையில்லை' என்பதும், 'உலகில் ஒரு குடவை செய்யப்பட்டதை மீண்டும் செய்யாதே' என்று எஸ்ரா பவுண்டு சொல்வதும், சென்ற காலமும், இறந்த காலமும் என்று டி.எஸ். எலியட் சொல்வதும், அழகைப் பாடிய பல கவிஞர்கள் குருடர்கள் என்று டபிள்யூ. பி. யேட்ஸ் சொல்வதும் புதுமையே. இவர்கள் புதுமையை நாடியவர்கள், ஸ்தாபித்தவர்கள்.