நீதம்
முஜாமலாவின் 'நீதம்' கவிதைகள், பிரிவுத் துயர், கனவுகள் மற்றும் சுய கழிவிரக்கம் போன்ற உணர்வுகளை ஆழமாகப் பேசுகின்றன.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
முஜாமலாவின் கவிதைகள்இலங்கை தென்கிழக்கில் இளையதலைமுறைக் கவிஞர்களில் முஜாமலாவும் ஒருவர். சட்டென்று கடந்து செல்ல முடியாமல் சற்று நின்று, நிதானித்து வாசிக்கக் கோருபவை அவருடைய கவிதைகள்.ஒரு இருண்ட பயணத்தில் கிடைக்கும் கையேடு போலவே இந்தக் கவிதைகள் என்பது அவரது ஒரு கவிதையின் வரிகள், பயணம் இருண்டதாக இருக்கவாம். ஆனால் அவருடைய கவிமனம் விழித்தபடியிருப்பது. பிரிவுத் துயர், சந்திக்க நேர்ந்த அவமானங்கள் பற்றிய அரற்றல், கணவுகள், பெண்மையின் முன்னெச்சரிக்கையுணர்வு, சுய கழிவிரக்கம், நினைவேக்கம் என அந்தக் கவிமனம் இயங்கியபடியிருக்கிறது.படிமங்களைப் பற்றிக் கொள்ளாமல் சயனத்திடல், மேகராகம், பிம்பங்களின் சாலை, பாலைவன வதை, ஆதி மழை, சூனியத் தீவு, சிநேகப் படிவம் போன்ற வார்த்தைச் சேர்க்கைகளினூடாக தன் கவிதைகளையும், உணர்வுகளையும் நகர்த்தப் பார்ப்பது முஜாமலாவின் பாணி, அவரை வரவேற்போம்.-உமா வரதராஜன்
