Skip to content

எமிலி ஸோலா

₹170.00

எமிலி ஸோலாவின் எழுத்துக்கள் பிரான்ஸ் நாட்டை உலுக்கியது! சி.பி. சிற்றரசுவின் விமர்சனக் கட்டுரை.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Biography , French Literature , Literary Criticism

Description

பீரங்கிக் குண்டுகளும், துப்பாக்கி வேட்டுகளும் வைத்த குறி தவறினாலும் தவறிவிடும். ஆனால் ஜோலாவின் எழுத்துக்களுக்குக் குறி தவறியதே இல்லை. குண்டுகள் குறிவைத்ததை மாத்திரம் அழித்துவிடும், பீரங்கிகள் வெடித்த கட்டிடம் மாத்திரம் நாசமாகும். வாள் பாய்ந்த மனிதன் உயிரோடு சரி, தீர்ந்தது வேலை. ஆனால் ஜோலாவின் எழுத்துக் கனல், நாகரிகமிக்க பாரீஸ் பட்டணத்தை மாத்திரமல்ல, அந்த அழகு நகரின் தாயகமான பிரான்சு நாட்டை மாத்திரமல்ல, அதைத் தாங்கி நின்ற ஐரோப்பா கண்டத்தை மாத்திரமல்ல, குற்றமற்ற டிரைபஸ் என்ற இராணுவ வீரன் அடைபட்டிருந்த டெவில்ஸ் தீவை மிதக்கவைத்திருந்த அலைகடல் மாத்திரமல்ல, அந்த ஓயாத அலையாண்ட கடலை அணியாரமாகக் கொண்ட அகில உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. தூங்கித் தூங்கி விழுந்துகொண்டிருந்த பிரான்சு அலறி எழுந்தது. நீண்ட கொட்டாவிவிட்டு தன் கை கால்களைத் திமிரிக்கொண்டு பார்க்கும்போது தன் எதிரில் எமிலி ஜோலாவின் எழுத்துக்கள் சிங்கம்போல் கர்ஜிக்கின்றன.-புத்தகத்திலிருந்து