ஆகச்சிறந்த 50 பாலிவுட் சினிமா கதைகள்
பாலிவுட் சினிமாவின் சிறந்த 50 கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்! அருண் கே. பிரசாத் எழுதிய இந்த புத்தகம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து.
| Category | Report |
|---|---|
| Publisher | நாதன் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Bollywood , Cinema , Film History |
Description
சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என்றும் பாட்டு என்றாலே இந்தி சினிமாப் பாட்டுதான் என்றும் ஒரு காலம் இருந்தது. குறிப்பாக ஆராதனா, பாபி மற்றும் ஷோலே வெளியான காலத்தில் தமிழ்நாடே இந்தி நாடா என யோசிக்கும் அளவுக்குத் நாடே மயங்கிக் கிடந்தது. இச்சூழலில்தான் இளையராஜா, பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற தொழில்நுட்ப மேதைகளுடன், கமல், ரஜினி மற்றும் ஸ்ரீதேவி போன்ற நட்சத்திரங்களும் தமிழ் சினிமாவில் உதயமாகினர். அன்று முதல் இன்றுவரை தமிழ் சினிமா உச்சத்திலிருந்து இறங்கவேயில்லை.ஆனால் தற்போது இந்தி சினிமாவில் 2010-க்குப் பிறகு கடந்த பதினைந்து வருடங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என மூன்றே மூன்று படங்களை மட்டுமே சொல்ல முடியும். காரணம் அங்கு நிலவும் கதைப் பஞ்சம், அதே சமயம் முந்தைய காலத்தில் இந்தி சினிமா சிறப்புக்குக் காரணம் அப்படங்களின் சிறந்த கதையமைப்பு. நாதன் பதிப்பகம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆகச்சிறந்த 50 மலையாள சினிமாக கதைகள் என்ற நூலுக்குக் கிடைத்த வரவேற்பையொட்டி இதுபோல இந்தி சினிமாவுக்கும் கொண்டுவர முடிவு செய்தோம். அதன்படி இந்நூல் ஆசிரியர் அருண் கே. பிரசாந்த் அவர்களுடன் சேர்ந்து கதையம்சம் சிறப்பாகவும் படத்தின் வெற்றிக்கு அடிப்படையாகவும் இருந்த 50 படங்களைப் பட்டியலிட்டோம். தொடர்ந்து அவர் அந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இந்த நூலைச் சிறப்புறக் கொண்டுவந்துள்ளார்.
