விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (பாகம் 3)
1909 - 1946
1909-1946 காலகட்டத்தின் விடுதலைக்கு முந்தைய அரிய தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History , Literary Criticism , Short Stories , Tamil Literature |
Description
தமிழில் சிறுகதை இலக்கியம் தோன்றி நூறாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இன்றைக்குப் பெரும்பாலான பழைய கதைகள், வாசிப்பும், பதிப்பும் இல்லாமல் பழங்கதைகளாகவே ஆகி விட்டன. அந்த நிலை மாற வேண்டும் என்ற முயற்சியில், சில ஆண்டுகளுக்கு முன் 'யாவரும் பதிப்பகம்' உடன் இணைந்து முன்னெடுத்தது தான் 'விடுதலைக்கு முந்தைய சிறுகதைகள்" தொகுப்பு, இதுவரை இரண்டு பாகங்கள் வெளிவந்து விட்டன. இப்போது உங்கள் கைகளில் இருப்பது மூன்றாம் பாகம்.இந்த முன்றாம் பாகத்தில் 1909-ல், விவேகபோதினியில் வெளியான சிறுகதை தொடங்கி. 1946-ல் வெளியான சிறுகதை வரை இடம்பெற்றுள்ளனஇத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்களின் தேர்வில் வெகுஜன எழுத்தாளர்கள். நவீன இலக்கிய எழுத்தாளர்கள் என்ற பாகுபாடு பார்க்கப் படவில்லை. ஒரு நூற்றாண்டின் படைப்புகள், பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெற்ற, சிந்தனைப் போக்கும் விழுமியங்களும், கருது கோள்களும் மாறி இருக்கக் கூடிய அடுத்தடுத்த தலைமுறையினரால் அளவிடப்படும்போது, அந்த அளவுகோல்களுக்குள் அப்படைப்புகள் அடங்காமல் போவது இயல்பே! ஆனால், அவற்றையும் மீறி, இந்தப் படைப்புகளில் வெளிப்படும் நோக்கமும், சமூக அக்கறையும். மாற்றத்திற்கான விழைவும், சிந்தனைகளும் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.இந்தத் தொகுப்பு ஒரு முயற்சிதான். ஆவணப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம். இதற்குக் கிடைக்கும் வரவேற்பு அடுத்தடுத்த பாகங்களைத் தொடுத்து வெளியிட உதவும்.
