Skip to content

கொரிய சோசலிசக் கல்வி

கிம் இல் சுங் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

₹200.00

வடகொரியாவின் வரலாறு, அரசியல் மற்றும் சோசலிசக் கல்வி குறித்து அறிய இந்த புத்தகத்தைப் படியுங்கள்.

Category Essay
Publisher Chinthan Books
Language Tamil
Year 2025
Format Paperback
Tags History , North Korea , Politics

Description

சுமார் மூன்று கோடி மக்கள் தொகைகொண்ட வடகொரியா வைப் பற்றி உலகிற்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் அமெரிக்கா பரப்பும் பொய்கள் மட்டுமே. வடகொரியா ஒரு சர்வாதிகார நாடு, அங்கிருக்கும் மக்கள் அறிவில்லாதவர்கள், ஜோம்பிகள், அடிமைகள், மனித இயந்திரங்கள் என்றெல்லாம் வியப்பான பொய்கள் பரப்பப்படுகின்றன. அமெரிக்க அதன் மொத்த இராணுவ பலத்தைக்கொண்டு தென் கொரியாவை தினந்தோறும் யுத்தத்திற்கு தூண்டுதல் தொடர்கிறது. ஆனாலும் 75 ஆண்டுகளுக்கு முன் பிரித்த கோட்டை தாண்டி ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை.அமெரிக்காவின் பொருளாதார தடைகள், அன்றாட இராணுவ அச்சுறுத்தல்கள், ஏகாதிபத்திய நாடுகளின் சுற்றிவலைத்தல்கள், நெருக்கடிகள் அனைத்தையும் சமாளித்து கொரிய மக்கள் போராடிவருகிறார்கள். சோசலிச திசையில் முனனேறி வருகிறார்கள்.பிளக்கப்பட்ட கொரியாவை ஒன்றிணைக்கும் கனவுடன் தொடர்கிறார்கள். உலகின் ஒவ்வொரு சோசலிச உணர்வாளரும் அந்த வீரமிக்க வடகொரிய மக்களைத் தலைவணங்கி பாராட்டவேண்டும்.கொரிய மக்களின் 75 ஆண்டுகால போராட்டத்திற்கு அடிப்படையாக அந்த நாட்டு மக்களை உணர்புப்பூர்வமாக அணி திரட்டுதல் அமைந்திருக்கிறது. ஒரு சமூகத்தை உணர்வுப்பூர்வமாக கட்டமைத்ததில் அந்த நாட்டில் அறிமுகப்படுத்தி செயல்படுத்திவரும் கல்வி முறையே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்த கருத்துக்கள் சோசலிச ஆர்வளர்கள் அனைவருக்கும் பயனுள்ளவையே.அந்த சோசலிசக் கல்வி முறைக்கு அடிதளமிட்டவர் கிம் இல்-சுங். அவர் சென்ற நூற்றாண்டின் 50 ஆம் ஆண்டுகளிலேயே ஜூச்சே எனும் கொரியத் தன்மையிலான தனித்துவத்தை அறிமுகப்படுத்தினார். இன்று சீனத்தில் சீனப் பண்புகளுடனான சோசலிசம் என்பதற்கு முன்பே அறிமுகப்படுத்தினார்.