என் காத்திருப்பின் முழுக் கவிதை
ஜெயக்குமாரின் 'என் காத்திருப்பின் முழுக் கவிதை' - சமகால வாழ்வின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கவிதைகள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
அன்றாட வாழ்வின் மிகச் சாதாரண காட்சிகளிலிருந்து கவிதையை உருவாக்குகிறார் ஜெய்குமார். பேருந்து நிறுத்தம், சாலை, கோயில், செல்பேசி. கூகுள் மேப், சந்திப்பு, பிரிவு என நம் கண்முன் கடந்து செல்லும் தருணங்களே இவரது கவிதைகளின் நிலப்பரப்பு.அலங்காரமான மொழியோ, தொன்மப் படிமங்களோ, அதீத புனைவுகளோ இங்கு இல்லை. அதற்கு பதிலாக மனிதர்களின் பழக்கங்கள், அவசரங்கள், முரண்பாடுகள் மற்றும் அவர்களுக்குள் இன்னும் உயிரோடு இருக்கும் சிறு மனிதநேயங்கள் இடம் பெறுகின்றன.கார்ட்டூனின் சில கோடுகளைப் போல எளிமையாகத் தோன்றும் இந்தக் கவிதைகள், வாசிப்பின் முடிவில் சமூகத்தின் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. நகைச்சுவை, ஏளனம், கரிசனம் மற்றும் யதார்த்தம் ஒன்றோடொன்று கலந்த இந்தக் கவிதைகள், நம் காலத்தின் முகத்தை அமைதியாகப் பதிவு செய்கின்றன.எதைப் பற்றியும் பெரிய பிரகடனங்கள் செய்யாமல், வாழ்வின் நடுவே நின்று மனிதர்களைப் பற்றிய ஒரு நேர்மையான உரையாடலைத் தொடங்குகிறது இத்தொகுப்பு.-கவிஞர் ப்ரியம்
