Skip to content

கவிதை நயம் (காலச்சுவடு)

க. கைலாசபதி எழுதிய கவிதை நயம் (காலச்சுவடு) - கவிதையின் நுட்பம், நயம் மற்றும் அழகை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கையேடு. கவிதை விமர்சனம் அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 112
Year 2020
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கவிதை மிகப் பழைய இலக்கிய வடிவம்; காலந்தோறும் மெருகேறி வருவது; எதனையும் பொருளாகக் கொள்வது; வகைவகையாக அமைவது; சொற்களால் உருப்பெறுவது; கவிஞனின் தனித்திறனையும் கோருவது; வெளிப்படையாகவோ உள்ளார்ந்த நிலையிலோ ஓசை நயம் உடையது.

கவிதையை இயல்பாகச் சுவைக்கலாம். ஆனால் அதன் நுட்பத்தைக் காணவும் திறனாய்வு செய்யவும் பயிற்சி வேண்டும். பயில்வதெனில் கவிதைக்கூறுகளை அறிய வேண்டும்; அக்கூறுகள் இயைந்து நின்று கவிதையாவதை இனங்காண வேண்டும்; உண்மைக் கவிதையைப் போலியிலிருந்து பிரித்தறிய வேண்டும்.

கோட்பாட்டு மேற்கோள்களால் அச்சுறுத்தாமல், இவ்வாறெல்லாம் பேராசிரியர் கைலாசபதியும் கவிஞர் முருகையனும் கைப்பிடித்து அழைத்துச்சென்று கவிதை நயம் காட்டுகிறார்கள்.

- பா. மதிவாணன்