Skip to content

நீல நதி

₹450.00₹205
54% OFF

‘நீல நதி’ வரலாற்றுப் புதினம் இஸ்லாமிய வரலாற்றை நேர்த்தியான தமிழில் வழங்குகிறது. வீரத்தையும், இறையுணர்வையும் தரும் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம்.

Category Novel
Publisher நாணல்
Language Tamil
Pages 384
Year 2026
Format Paperback

Description

வழி நெடுகிலும், சிற்றரசுகளின் கோரிக்கைகளை ஏற்றவராக அபூ உபய்தா முஸ்லிம் சேனையுடன் உர்துன் சமவெளியை நோக்கிச் சென்றார். ஓரிடத்தில், அந்தப் பகுதிவாழ் கிறிஸ்துவர்களிடமிருந்து வந்த கடிதம் ஒன்று இப்படிக் கூறியது;

“முஸ்லிம்களே! உங்களுக்கு நல்வரவு கூறுகிறோம். ரோமர்கள் எங்கள் மதத்தவர்கள் தாம். இருந்தாலும் அவர்களை விட உங்களையே நாங்கள் அதிகம் விரும்புகிறோம். காரணம், அவர்களைவிட நீங்கள் கிறிஸ்துவர்களாகிய எங்களிடம் நம்பிக்கையுடன் நடந்து கொள்கிறீர்கள். அவர்களைவிட எங்கள் மீது கருணையுடன் நடந்து கொள்கிறீர்கள். மேலும், நீங்கள் எங்களுக்கு எவ்வித அநீதியும் இழைப்பதில்லை. ஆம், அந்த ரோமர்களைவிட எங்கள் மீது நீங்கள் செலுத்தும் ஆட்சி மிக நல்லாட்சியாக இருக்கின்றது. ஏனெனில், உங்களைப் போல அல்லாமல் ரோம ஆட்சியாளர்கள் எங்கள் உடைமைகளையும் எங்கள் இல்லங்களையும் எங்களிடமிருந்து சூறையாடிக் கொண்டிருந்தனர்.”

இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ள ‘நீல நதி’ எனும் இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களுக்கு ஒரு புதுமையான வாசிப்பு அனுபவத்தையும் ஆழ்ந்த இறையுணர்வையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை. மிக நேர்த்தியான, தூய்மையான தமிழ் நடையில் கற்பனையாக இல்லாமல், வரலாற்றுச் சான்றுகளையும் உண்மைகளையும் மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள விதமே இந்நூலின் தனிச்சிறப்பு.

அலங்காரச் சொற்களுக்கோ தேவையற்ற கற்பனைகளுக்கோ இடம் தராமல், வரலாற்றுச் சம்பவங்களின் தன்மையும் சுவையும் மாறாத வண்ணம் ஆசிரியர் ‘நூன்’ நூலை நகர்த்திச் செல்கிறார். எகிப்தின் ஃபுஸ்ஸதாத் நகரில் ‘தவ்ஹீதின்’ தென்றல் வீசிய வரலாற்றையும் ஷாம் தேசத்தின் வெற்றியையும் விரிவாகக் கூறும் இந்நூல், வாசிப்பவர்களின் மனங்களில் வீரம், நேர்மை, தியாகம் ஆகிய உயரிய பண்புகளை விதைக்கும்.