Skip to content

காட்டிலிருந்து வந்தவன்

சுதாராஜ் எழுதிய காட்டிலிருந்து வந்தவன் - ஈழத்துச் சிறுகதைகள், மனித உறவுகள் மற்றும் யாழ்ப்பாண கிராமத்து வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. வன்முறைக்கு எதிரான சிறந்த படைப்பு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 128
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். இத்தொகுப்பில் சுதாராஜின் பத்துச் சிறுகதைகள் உள்ளன. 'ஒரு துவக்கத்தின் கதை' இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. யுத்தத்துக்கு முந்திய அமைதியான யாழ்ப்பாணக் கிராமத்துச் சூழலில் முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் வன்முறைக்கு எதிராக எழுதப்பட்ட மிகச்சிறந்த ஈழத்துச் சிறுகதைகள் சிலவற்றுள் இதுவும் கட்டாயம் இடம்பெறும்.

சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனிதநேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளூடாக வெளிப்படுகின்றன. அவரது இலக்கியத்தில் போலிப்பகட்டு, சுத்துமாத்து எதுவுமில்லை. எல்லாமே எளிமையானவை; வெளிப்படையானவை; நேரடியாகச் சொல்லப்படுவை. 

- எம். ஏ. நுஃமான்