சடங்கில் கரைந்த கலைகள்
அ. கா. பெருமாள் எழுதிய சடங்கில் கரைந்த கலைகள் - நாட்டார் கலைகள், சடங்குகள் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்த விரிவான ஆய்வு. கன்னியாகுமரி மாவட்டக் கலைகளின் முக்கியத்துவம் அறியலாம்.
| Category | Report |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 184 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத்தும் பாட்டும் போன்ற கலைகளுக்கும் தெய்வ வழிபாட்டுச் சடங்குகளுக்குமான உறவை விரிவாக ஆராய்கிறது இந்நூல். காலப்போக்கில் இக்கலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சமூகக் காரணிகளின் பின்புலத்தில் அலசுவதோடு இவை தொடர்பாகக் கல்வித் துறையில் நிகழ்ந்துள்ள ஆய்வுகளையும் இந்நூல் சுட்டுகிறது. மேற்சொன்ன நாட்டார் கலைகளுடன் தொடர்புடைய கணியான் தோற்றக் கதை, பொம்மியம்மன் கதை, தாருகன் வதை போன்றவையும் கணியான் சாதிக் குழூஉச் சொற்களும் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
