சத்திய வெள்ளம் (திருமகள் நிலையம்)
₹130.00
நா. பார்த்தசாரதியின் 'சத்திய வெள்ளம்' நாவல், சுதந்திரத்திற்குப் பிறகும் இந்திய சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | திருமகள் நிலையம் |
| Language | Tamil |
| Year | 2008 |
| Format | Paperback |
Description
இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்றுக் கால் நூற்றாண்டு முடியப் போகிறது. என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸீம் தொடங்கிய போராட்டங்கள் முடிந்துவிட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவிவெறி, சுயநல நஞ்சு, வறுமைப்பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை.
