Skip to content

தாஸிகள் மோசவலை

ஆ.ராமாமிர்தத்தம்மாள் எழுதிய தாஸிகள் மோசவலை - தேவதாசி முறையின் கொடூரமான நிதர்சனத்தையும், பெண்களின் சமூகப் போராட்டத்தையும் இந்நாவல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Novel
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society → Gender and Equality
SKU 9788119304622

Description

நமது நாட்டில் பெண்கள் தெய்வங்களாகப் போற்றப்படுகிறார்கள் என்பது ஏமாற்றுப் பேச்சு. இந்நாட்டுப் பெண்கள் எல்லாத் துறையிலும் அழுத்திவைக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்குத் தெய்வங்களின் பேராலும் சாஸ்திரங்களின் பேராலும் ஒரு பெண் சமூகத்தை வியபிசாரத்திற்குத் தயாராக்கிக் கொலைபாதகம் செய்திருப்பதொன்றே போதிய சான்றாகும். 15 ஆண்டுகளுக்கு முன் தேவதாஸிகள் பிரச்சினை காந்தியடிகள் கவனத்தையும் ஈர்த்தது. பாரிஸால் என்னும் ஊரில் தேவதாஸிகளின் இழந்த வாழ்க்கையை அவர் நேரில் கண்ணுற்று வருந்தினார். தேவதாஸி முறையையே அடியோடு அழித்து ஒழித்துவிடவேண்டும் என்று எண்ணினார்.

"தாஸிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” என்னும் பெயரிய இந்நாவல் புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்ததொன்றாகும்."தேவதாஸி முறை ஒழிந்து அச்சமூகம் முன்னேற்றம் அடையவேண்டும். அவர்களால் கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுவதோடு மனைவி மக்களையும் திண்டாடச் செய்யும் வாலிபர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கவேண்டும்" என்பதே இந்நாவலின் குறிக்கோளாகும். இதில் அநுபவ உண்மைகளே எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. நாவல் எழுதும் விஷயத்தில் இதுவே எனது முதல் முயற்சி. கதைப்போக்கு முதலியவற்றில் குற்றங்குறைகள் இருக்கலாம். குற்றம் பொறுத்துக் குணத்தைப் பாராட்டல் கற்றறிந்த மேலோர் கடன்.

-புத்தகத்திலிருந்து