Skip to content

இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்

₹110₹104
5% OFF

அறிஞர் அண்ணா எழுதிய இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் - வரலாற்று நிகழ்வுகளின் அழிவு, கொடுமை மற்றும் இழப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த நூல், அதிகாரத்தின் ஆபத்தான பக்கத்தை விவரிக்கிறது.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 88
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788196258160

Description

நெப்போலியனுடைய ஆதிக்க வேட்டைக்கு ஒரு நோக்கம்கூட இருக்கலாம் - அந்த நோக்கம் நேர்த்தியானது என்று திறம்பட வாதிடவும் செய்யலாம். ஆனால் எத்தனை எத்தனை அழிவு, கொடுமை, இழப்பு, இடிபாடு, இடர்ப்பாடு! எல்லாம் கடைசியில் எதற்குப் பயன்பட்டது -ஒரு மாவீரன் மகத்தான வெற்றிகளை, திறமையால், உழைப்பால், திட்டமிடுவதால் பெறமுடிந்தது என்பதை வரலாற்றுச் சுவடியிலே இணைத்துக் காட்டத்தானே! மல்லிகையின் வெண்ணிறத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து, மதலையினைக் கொன்று, அந்தக் குருதியிலே மல்லிகையைக் கொட்டி, செந்நிறமேற்றிக் காட்டுவதா! இரத்தம் பொங்கிடும் இருபது ஆண்டுகள், ஓர் இலட்சிய அடிப்படையிலே மேற்கொள்ளப்பட்ட புனிதப் பணி அல்லவே அல்ல! ஆற்றலை அளவுகடந்து பெற்றவன், அவனியை அழித்தேனும், வெற்றிப் புகழ்பெற நினைந்திடும் விபரீத விளையாட்டு அது. உலக வரலாற்றிலே பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஏற்படும் பூகம்பம். எரிமலை. பெரும் புயல், பெருவெள்ளம்.

-புத்தகத்திலிருந்து