நீதிதேவன் மயக்கம் (ஆழி பதிப்பகம்)
அறிஞர் அண்ணா எழுதிய நீதிதேவன் மயக்கம் - ஆழி பதிப்பகம், பக்தியின் பெயரால் நடந்த கொடூரங்களை கேள்வி கேட்கும் நாவல். நீதி, தர்மம் குறித்த புதிய பார்வை!
| Category | Novel |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9781234567897 |
Description
இறைவனின் நற்தொண்டன் என்று தன்னைக் கூறிக்கொண்டு, இரக்கமற்ற இவர் அரக்கரல்ல கம்பரே! நான் அரக்கன். கேட்டால் என்ன சொல்லுவார் பக்தி அதனால் செய்தேன் என்பார். பக்தியின் பேரால் படுகொலை செய்தேன் என்பார். பக்தியின் பேரால் படுகொலை செய்தார் காரணம் எதுவோ கிடக்கட்டும் -நடந்தது படுகொலை இரக்கம் இருந்ததா? துளி! பெண்கள் அழுதபோது? பால் வடியும் முகமுடைய சிசு கதறியபோது? - இருந்ததா -இரக்கம் காட்டப்பட்டதா கோட்புலியாரே, இரக்கம் காட்டினீரா? இரக்கமற்றுப் படுகொலை செய்தவர், நாயனார் - அடியார் - கொலைக்கஞ்சா கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர் தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசுராமன் - பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றி கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் இவர்களெல்லாம் தவசிகள் ரிஷிசிரேஷ்டர்கள் பரமன் அருளைப் பெற்றவர்கள் - நீதிதேவா! நான் அரக்கன் -இவர்கள் யார்?
-புத்தகத்திலிருந்து
